வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து ரூ.713 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னையில் 2 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர் நீதிமன்றம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 24 கி.மீ. தொலைவுக்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ. தொலைவுக்கு 2வது பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.

இரு வழித்தடத்திலும் சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட பாதை வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில், முதல்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை பணிகள் முடிந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை யில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பாதையை விரிவுபடுத்த ஆய்வு நடத்தி மாநில அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. பிறகு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மத்திய அரசுடன் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு சார்பில் ரூ.713 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இருந்து ரூ.916 கோடியும், கடன்வசதி மூலம் 2,141 கோடி திரட்டவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வழித்தடம் மொத்தம், 9.051 கி.மீ தூரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications