முறைகேடுகள் எதிரொலி... ஒடிஷாவில் 18,000 கோயில்கள், மடங்களில் முதல்முறையாக சிஏஜி தணிக்கை!!
புவனேஸ்வர்: ஒடிஷாவில் சுமார் 18,000 கோயில்கள், மடங்களின் வருவாயை முதல் முறையாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தணிக்கை செய்ய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கான நடைமுறைகளை சிஏஜி அலுவலகம் தொடங்கிவிட்டதாகவும் இத்தணிக்கைப் பணிக்காக சுமார் 18,000 கோயில்கள், மடங்கள் அடங்கிய பட்டியலை ஒடிஷா அரசு தயாரித்திருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோயில், மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு கிடைத்த விலைக்கு சில நபர்கள் விற்றுவிட்டதாகவும், இன்னும் பலர் நீண்ட காலமாக கோயில்கள், மடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் ஒடிஷா அரசுக்கு தொடர் புகார்கள் சென்றன.
இந்த கோயில்கள், மடங்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதால் பெருமளவில் முறைகேடுகளும் நடந்து வருவதாக அரசுக்குப் புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஒடிஷா அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மத்திய கணக்கு தணிக்கை வாரியம் முதல் முறையாக கோயில்கள், மடங்களின் வருவாயை ஆராயத் தொடங்கி உள்ளது. இதற்கு தற்போதே சில அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications