ஒமிக்ரான் பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் மட்டும் போதுமா? பூஸ்டர் தடுப்பூசி ஏன் தேவை?

Subscribe to Oneindia Tamil
ஓமிக்ரான்
Getty Images
ஓமிக்ரான்

ஒமிக்ரான் திரிபு ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.

இந்தத் திரிபு விரைவில் மற்றவற்றைவிட அதிகளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, நோயாளிகளின் எண்ணிக்கை இதனால் அதிகரிக்கலாம் என்று பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார மையங்கள் நோயாளிகளால் நிரம்பி வழியும் அளவுக்கு நோய்த்தொற்றுப் பரவலை ஏற்படுத்தக்கூடிய அலையாக இருக்கும் என்ற அபாயம் இருக்கிறது. ஆகவே, அந்த அச்சத்தின் விளைவாகவே இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் இருக்கின்றன.

இங்கிலாந்து மட்டுமின்றி உலகின் பெரும்பான்மை பகுதிகள், அடுத்த சில மாதங்களில் மிகுந்த சவாலை எதிர்கொள்ளப் போகின்றன. ஆனால், அது நம்பிக்கையற்ற சூழ்நிலையாக இருக்கப் போவதில்லை.

ஒமிக்ரான் வீரியம் குறைவானதாக இருக்கலாம்

ஒமிக்ரான் திரிபு குறித்த பல பரிந்துரைகள், இது குறைந்த வீரியம் கொண்ட நோய்த்தொற்றையே ஏற்படுத்துவதாகச் சொல்கின்றன. தென்னாப்பிரிக்காவில், முந்தைய அலையில் நிகழ்ந்ததைப் போல், மக்கள் தீவிரமாக நோய்வாய்ப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து இன்னும் தெளிவற்ற நிலையே நிலவுகிறது. ஆனால் இந்த வைரஸ், தீவிரம் குறைந்ததாக மாறிவிட்டதாக அர்த்தமில்லை. ஏற்கெனவே தொற்றுக்கு ஆளானோருக்கு மீண்டும் தொற்று வருவது, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு தொற்று வருவது ஆகியவற்றால், அதன் தீவிரம் குறைவாக உள்ளது.

உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பு, இப்போது இந்த வைரஸை அடையாளம் கண்டுகொள்கிறது. அதனால், இந்தத் தொற்றுநோயை முற்றிலுமாகத் தடுக்கமுடியாமல் போனாலும், அதை எதிர்ப்பது எப்படியென நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பிற்குத் தெரிந்திருக்கிறது.

கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோயியல் வல்லுநரான பேராசிரியர் பால் ஹன்டர், "சமமாகக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள், உறுதியாக அதைச் சுட்டிக்காட்டுகிறது," என்று கூறியுள்ளார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசன் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஐரோப்பா முழுவதும் குளிர்காலத்தின்போது கோவிட் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்திலிருக்கும் மக்களின் எண்ணிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டது.

ஓமிக்ரான்
Getty Images
ஓமிக்ரான்

இங்கிலாந்தில் மற்ற பகுதிகளிலும் இதைச் சொல்ல முடியும் என்றாலும், அதிக மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் விகிதத்தைக் கட்டமைத்து வைத்துள்ளதால், இங்கிலாந்தில் தொற்றுக்கு ஆளாகக்கூடியோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக அது கண்டறிந்தது.

இந்த ஆய்வு, டெல்டா திரிபின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. எனவே, அதன் அடிப்படையில், பாதிக்கப்படக்கூடியவர்களாகக் கருதப்படும் மக்கள் தொகையின் விகிதம், எல்லா நாடுகளிலும் அதிகளவில் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

இருப்பினும், இலையுதிர் காலத்திலேயே அதிகளவு நோய்த் தாக்குதல் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டதன் காரணமாக, இப்போது இங்கிலாந்து சில நன்மைகளோடு பயனடையும் வாய்ப்பும் உள்ளது.

அதற்கும் மேலாக, ஒமிக்ரானின் தாக்கத்தை மழுங்கடிப்பதில் இன்றியமையாததாக இருக்கும் பூஸ்டர்களை அதிகளவில் செலுத்துவேண்டும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

பேராசிரியர் ஹன்டர் கூறியபோது, "தடுப்பூசியால் தூண்டப்பட்ட மற்றும் முன்னர் ஏற்பட்ட நோய்த்தொற்றால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தவரை, கூடுதல் கட்டுப்பாடுகளின் தேவை குறைவாக உள்ளது."

தடுப்பூசி பூஸ்டர்
BBC
தடுப்பூசி பூஸ்டர்

கடுமையான கட்டுப்பாடுகள், தொற்றுநோய்ப் பரவலை நிறுத்தாது. அவை அதை நீட்டிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

"நீங்கள் தடுப்பூசிகள் அல்லது சிறந்த சிகிச்சைகளுக்காகக் காத்திருக்கிறீர்கள் எனில், வைரஸ் பரவலை அடக்குவது பலன் கொடுக்கலாம். ஆனால், அதற்குரிய வாதத்தை இப்போது பார்ப்பது கடினமாக உள்ளது."

ஆனால் , "எச்சரிக்கை மிகுந்த நம்பிக்கையோடு," அப்படி நடக்காது என்கிறார். அதோடு, ஒமிக்ரான் குறித்து வெளிப்படுத்தப்படும் கவலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் இயல்பாகவே தங்கள் நடவடிக்கையைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தொடங்குவார்கள் என பேராசிரியர் பால் நம்புகிறார்.

"வேறு திரிபுகளும் எதிர்காலத்தில் இருக்கும்.ஆனால், நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் இன்னும் அதிகமாகியிருக்கும். ஒரு சாதாரண சளியைப் போன்ற மிகவும் மென்மையான தொற்றாகவே அதை எதிர்கொள்வோம்," என்றும் கூறுகிறார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ தொற்றுநோயியல் வல்லுநரும் முன்னணி மருத்துவருமான டாக்டர்.ராகிப் அலி, "மக்கள்தொகையில் நோய் எதிர்ப்பாற்றலின் அளவைக் கருத்தில் கொண்டு பீதியடையத் தேவையில்லை," என்று கூறுகிறார்.

"மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில் என்ன நடக்கிறது என்பது பற்றிய தெளிவு கிடைக்கும்வரை, நாம் அமைதியாக இருக்கவேண்டும். அதை விரைவில் தெரிந்துகொள்வோம்," என்கிறார்.

நோய்த்தொற்றுப் பரவல் உயர்வதை, மருத்துவமனைகள் நிரம்பி வழிவதைத் தடுக்க, கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+