புத்தாண்டின் முதல் நாளிலிருந்து கார், பைக், டிவி, ஏசி விலை உயர்கிறது!
டெல்லி: வரிச் சலுகைகளை மத்திய அரசு திடீரென ரத்து செய்துவிட்டதால், நாளை புத்தாண்டு முதல் கார், பைக், டிவி, ஏசி, ப்ரிட்ஜ் என அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்கிறது.
மோட்டார் வாகன உற்பத்தித் துறை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தித் துறைக்கு முந்தைய காங்கிரஸ் அரசு பலவிதமான வரிச் சலுகைகளை அளித்திருந்தது. இப்போது அனைத்து சலுகைகளையும் இன்று டிசம்பர் 31-ம் தேதியோடு ரத்து செய்துள்ளது மோடி அரசு.

இதனால், நாளை முதல் அனைத்து வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகளையும் உயர்த்துகின்றன உற்பத்தி நிறுவனங்கள்.
இதன்படி சிறிய ரக கார்களின் விலை ரூ 10 ஆயிரம் முததல் 35 ஆயிரம் வரை உயர்கிறது. சொகுசு கார்களின் விலை ரூ 5 லட்சம் வரை உயர்கிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளின் விலை ரூ 500 முதல் 1500 வரையும், வாஷிங் மெஷின்கள் விலை ரூ 400 முதல் 600 வரையும், குளிர்சாதனைப் பெட்டிகள் விலை ரூ 600 முதல் 1500 வரையும், மோட்டார் சைக்கிள்கள் விலை ரூ 1500 முதல் 2000 வரையும் உயர்கின்றன. ஏசி விலை ரூ 1000 வரை உயர்கிறது.












Click it and Unblock the Notifications