அதிகமாக ரூ.500 நோட்டுகள் அச்சிடப்படும்.. பணத்தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை!
இந்தியா முழுக்க திடீரென்று நிலவும் பணத்தட்டுப்பாட்டை குறைக்க 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட உள்ளது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: இந்தியா முழுக்க திடீரென்று நிலவும் பணத்தட்டுப்பாட்டை குறைக்க 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட உள்ளது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் இருந்து இந்தியாவில் திடீர் என்று ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு தற்போது இந்தியா முழுக்க பரவி உள்ளது. தமிழகத்திலும் பல பகுதிகளில் இந்த தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்படுமா என்ற பதற்றம் உருவாகி உள்ளது. பீகார், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி பணத்தட்டுப்பாட்டை குறைக்க 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட உள்ளது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். 5 மடங்கு அதிகமாக 500 நோட்டுகள் ரூபாய் அச்சிடப்பட உள்ளது. இப்போதுவரை தினமும் 500 கோடி மதிப்பிற்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகிறது.
ஆனால் இன்னும் இரண்டு நாட்களுக்கு தினமும் 2500 கோடி ரூபாய் மதிப்பிற்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட உள்ளது. இந்த மாதத்தில் மொத்தமாக அச்சிடப்படும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பு 70000-75000 கோடியாக இருக்கும் என்று சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். இதனால் பணத்தட்டுப்பாடு குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications