மத்திய அரசை நம்பினால் சொட்டு நீர் கூட கிடைக்காது - தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்
காவிரி பிரச்சனையில் மத்திய அரசை நம்பினால் சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: காவிரி பிரச்சனையில் மத்திய அரசை நம்பினால் சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டு இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இன்னும் வாரியம் அமைக்கவில்லை. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ளது.

இன்றைய விசாரணையில் எப்போதும் போல தமிழகத்தை வஞ்சித்து மத்திய அரசு மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது. கூடுதலாக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் எந்த கண்டிப்பும் தெரிவிக்காமல், மே 14ம் தேதி அன்று வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதற்கு மத்திய அரசு காரணம் கூறியுள்ளது. அதன்படி கர்நாடகாவில் தேர்தல் நடப்பதால், இந்த வரைவு அறிக்கையை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டு இருக்கிறது என்றுள்ளது. தேர்தல் முடிந்த பின் வரைவு அறிக்கையை உருவாக்கிவிடலாம் என்று கூறியுள்ளது.
இதற்கு தமிழக அரசு எதிர்வாதம் செய்தது. தமிழக அரசு தனது வாதத்தில் ''மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளது. மத்திய அரசை நம்பினால் தண்ணீர் கிடைக்காது. அவர்களை நம்பி நாங்கள் காத்து இருந்தால் எங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. தேர்தலை காரணம் காட்டி அரசு மக்களை வஞ்சிக்கிறது.'' என்றுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications