For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி வாரியம் அமைக்கக் கூடாது- பெங்களூரில் எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அனைத்து கட்சி எம்பிக்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம்அமைக்கக் கூடாது என்று அனைத்து கட்சி எம்பிக்களுடன் பெங்களூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகம், கர்நாடகம், புதுவை, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Cauvery issue: All parties MPs meeting going on in Bengaluru

இதில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீர் வளத் துறை செயலாளரிடம் தங்களது எதிர்ப்பை கர்நாடக அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் இன்று அனைத்து கட்சி எம்பிக்களுடன் பெங்களூரில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது காவிரி வாரியம் அமைக்க கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் காவிரி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் உள்ளிட்ட சட்டநிபுணர்களின் ஆலோசனையை ஏற்று முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Cauvery issue: CM Siddaramaiah discusses with all parties MPs in Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X