காவிரி ஆணையம்: ஜூலை 2-ல் முதல் கூட்டம்.. நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜூலை 2-ல் முதல் காவிரி ஆணைய கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: ஜூலை 2-ல் முதல் காவிரி ஆணைய கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முறையாக இப்போதுதான் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி வாரியம் அமைப்பட்டுள்ளது.காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவுக்கு 2 கர்நாடகா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். காவிரி ஆணையத்தின் கர்நாடக பிரதிநிதியாக ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக பிரதிநிதியான பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அனைத்து 4 மாநிலத்திற்கும் காவிரி ஆணிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதையடுத்து தற்போது ஜூலை 2-ல் முதல் காவிரி ஆணைய கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் அனுப்பப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் எவ்வளவு தண்ணீர் எந்த தேதியில் திறக்கப்பட வேண்டும் என்று முடிவு வெளியாகும்.
இவ்வளவு நாள் கர்நாடக அதுவாக திறந்துவிடும் தண்ணீர் மட்டுமே நமக்கு வந்தது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இனி காவிரி வாரியமும் கூறும் அளவு நீரை திறந்துவிடும்.












Click it and Unblock the Notifications