காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீடு!

காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக தேர்தலை காரணம் காட்டி தாமதப்படுத்திய மத்திய அரசு ஒரு வழியாக வரைவு திட்டத்தை தாக்கல் செய்தது.

இதற்கு, மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.ஆனால், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

பருவமழை தொடங்குவதற்குள்

பருவமழை தொடங்குவதற்குள்

இதனை அடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. மேலும், இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காலம் தாழ்த்தியது

காலம் தாழ்த்தியது

ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்கி ஒரு வாரமாகியும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தியது.

அவமதிப்பு வழக்கு

அவமதிப்பு வழக்கு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கூறப்பட்ட நிலையில், இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியானது.

அரசிதழில் வெளியீடு

அரசிதழில் வெளியீடு

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை சார்பில் அரசிதழில் வெளியிட பரிந்துரை கடிதம் தரப்பட்டுள்ளது.

இதிலும் லேட்

இதிலும் லேட்

பருவமழை தொடங்கும் முன்பு அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கி ஒரு வாரம் கழித்து மத்திய அரசு அரசிதழில் காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+