காவிரி நதி நீர் பங்கீடு தீர்ப்பு: ஒரு மாதமாகியும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாத தமிழகம், கர்நாடகம்
காவிரி நதி நீர் பங்கீடு தீர்ப்பை எதிர்த்து தமிழகமும், கர்நாடகமும் மறு சீராய்வு மனுவை இதுவரை தாக்கல் செய்யவில்லை.
டெல்லி: காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒரு மாதமாகியும் தமிழக அரசோ கர்நாடக அரசோ மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை.
200 ஆண்டுகளாக காவிரியில் நதி நீரை பங்கீடுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தனது இறுதி தீர்ப்பை அளித்தது. அது 15 ஆண்டுகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் தீர்ப்பு வெளியிட்ட 30 நாட்களுக்குள் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால் தீர்ப்பு வெளியாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் தமிழகம், கர்நாடகம் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து கர்நாடகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் கதார்கி கூறுகையில், 200 ஆண்டுகள் வரலாற்று சிறப்புவாய்ந்த இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய 30 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கியும் கர்நாடகம் மற்றும் தமிழகம் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை. இப்போதும் ஒன்று கெட்டுவிடவில்லை, காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டும் மறுசீராய்வை தாக்கல் செய்யலாம். ஆனால் அது போல் நடப்பது சாத்தியமில்லை.
தற்போது கேரளம் மட்டும் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கேரள அரசு முக்கியமான ஒன்று இல்லை. எனவே இந்த மனுவுக்கு அனுமதி கிடைத்தாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 30 டிஎம்சி தண்ணீரை திருப்பிவிட அனுமதி கோரியுள்ளது கேரள அரசு.












Click it and Unblock the Notifications