வங்கி மோசடி வழக்கில் சிபிஐ வேட்டை தொடருகிறது.. பிஎன்பி வங்கி பொது மேலாளர் அதிரடி கைது
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி பொதுமேலாளர் பொறுப்பிலுள்ள அதிகாரியை சிபிஐ கைது செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.11,400 கோடி அளவுக்கு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் வெளிநாடு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து சிபிஐ தனது விசாரணை வளையத்தை இறுக்கியுள்ளது. 2009-11ம் ஆண்டில், மும்பை பிராடே ஹவுஸ் பகுதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி தலைமை பொறுப்பில் இருந்த ராஜேஷ் ஜிந்தால் நேற்று இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது பதவிக் காலத்தில் இருந்துதான், நீரவ் மோடிக்கு எல்லையில்லாத அளவுக்கு கடன் உத்தரவாத கடிதங்கள் வழங்கும் முறைகேடு துவங்கியுள்ளதால் இவரை பிடித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
டெல்லியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி தலைமை அலுவலகத்தில் கடன் பிரிவில் பொது மேலாளர் பொறுப்பில் இப்போது இருந்து வருபவர் ராஜேஷ் ஜிந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல சிபிஐ நேற்று, விபுல் அம்பானி என்பவரை கைது செய்தது. இவர் நீரவ் மோடியின் ஃபையர் ஸ்டார் வைரம் நிறுவனத்தின் நிதித்துறை பிரிவு தலைவராக செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது ஒரு முக்கியமான கைதாக பார்க்கப்பட்டது.
மேலும் 4 சீனியர் எக்ஸ்சிகியூட்டிவ் மட்டத்திலான அதிகாரிகளான கவிதா மணிகர், அர்ஜுன் பாட்டில் உட்பட நால்வரை சிபிஐ கைது செய்துள்ளது.












Click it and Unblock the Notifications