சுற்றுச் சூழல் அனுமதி: 3 புதிய பூர்வாங்க விசாரணை பதிவு- ஜெயந்தி நடராஜனிடம் விரைவில் சிபிஐ விசாரணை?
டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயந்தி நடராஜன் பல்வேறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக சிபிஐ புதிதாக மூன்று பூர்வாங்க விசாரணைகளைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கோருவதற்காக ஜெயந்தி நடராஜனை விரைவில் சிபிஐ அழைக்கக்கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். கடந்த 2013ஆம் ஆண்டு திடீரென மத்திய அமைச்சரவையில் இருந்து ஜெயந்தி நடராஜன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகாலம் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தார் ஜெயந்தி. இந்நிலையில் திடீரென நேற்று கடந்த நவம்பர் மாதம் சோனியாவுக்கு அவர் எழுதிய நீண்ட கடிதம் ஒன்று ஊடகங்களில் வெளியானது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அக்கடிதம் குறித்து விளக்கம் அளித்த ஜெயந்தி தம்மை ஓரம் கட்டிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாகவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயந்தி நடராஜன் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சுற்றுச்சூழல் துறையில் பெயர் தெரியாத அதிகாரிகள் மீதும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத்தின் மீதும் சி.பி.ஐ. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2 பூர்வாங்க விசாரணைகளைப் பதிவு செய்திருந்தது.
தற்போது மேலும் மூன்று பூர்வாங்க விசாரணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ பதிவு செய்துள்ள பூர்வாங்க விசாரணைகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
மேலும் ஜெயந்தி நடராஜனின் பதவிக்காலத்தில் அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிகள் தொடர்பாக அத்துறை அதிகாரிகள் சிலரிடம் சி.பி.ஐ. ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜெயந்தி நடராஜனிடமும் விசாரணை நடத்த சிபிஐ உத்தேசித்துள்ளது.
இதனிடையே, மாநில அரசு அதிகாரிகளையும் சிபிஐ விசாரித்துள்ளதோடு, ஆவணங்களையும் ஆராய்ந்துள்ளது. சில கோப்புகளுக்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்றும் சில கோப்புகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிலுவையில் வைத்தது ஏன்? என்றும் ஜெயந்தி நடராஜனிடம் சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications