Mamata vs CBI: அடுத்த திருப்பம்.. சிபிஐக்கு மேற்கு வங்க போலீஸ் சம்மன்.. சரமாரி கேள்வி!
கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய சென்றது ஏன்? என்று சிபிஐக்கு மேற்கு வங்க போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது.
கொல்கத்தா: கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய சென்றது ஏன்? என்று சிபிஐக்கு மேற்கு வங்க போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது.
தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகிய ஊழல்கள் காரணம் தற்போது மேற்கு வங்கம் பெரிய பரபரப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதில் கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை குற்றம்சாட்டி சிபிஐ நேற்று அவரை கைது செய்ய முயன்றது. நேற்று இதற்காக அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்று இருந்தனர்.
ஆனால் இந்த கைதை தடுக்கும் வகையில் கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்தது. அதன்பின் அந்த சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் இது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கோவத்திற்கு உள்ளாக்கி உள்ளது. கொல்கத்தாவில் மமதா பானர்ஜி இது தொடர்பாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.நேற்று இரவில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக மாநில அரசுக்கும் , போலீசுக்கும் எதிராக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதற்கு மத்தியில் தற்போது திடீர் திருப்பமாக சிபிஐக்கு மேற்கு வங்க போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது.
கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய சென்றது ஏன்? சிகரெட் ஆபரேஷன் என்ற பெயரில் கமிஷனர் வீட்டை நோக்கி சிபிஐ அதிகாரிகள் சென்றது ஏன்?.
அரசுக்கு இதுகுறித்து அறிவிப்பு வெளியிடாததன் காரணம் என்ன? அரசின் அனுமதி இன்றி கமிஷனரை விசாரிக்க சென்றது ஏன்? என்று மேற்கு வங்க போலீஸ் தனது சம்மனில் கேள்வி எழுப்பி இருக்கிறது. மேற்கு வங்க சிபிஐ இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவாவிற்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications