அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 'டிரெஸ் கோட்': இஸ்லாமிய மாணவிகளுக்கு சிக்கல்
டெல்லி: அகில இந்திய மருத்துவக் கல்விக்கான மறுநுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் முறையாக 'டிரெஸ் கோட்' அறிவுறுத்தலை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் விடுத்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது இஸ்லாமிய மாணவியரை நுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து ஒதுக்கும் முயற்சி எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 3ந்தேதி 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து மறு தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வரும் 25-ந் தேதி மறு நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான கடந்த 9-ந் தேதியன்று சுற்றறிக்கை ஒன்றை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டது.
அதில், மாணவ மாணவியர் தலையில் 'ஸ்கார்ப்' அணியக் கூடாது; ஸ்லீவ்லெஸ் உடைகளை அணியக் கூடாது; ஷூக்களுக்கு பதிலாக செருப்புகளே அணிய வேண்டும் என்று முதல் முறையாக ஏராளமான உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் முறைகேடுகள் நடக்காமல் இருக்கவே இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கூறினாலும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுவாக இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்து பள்ளிக் கூடங்களுக்கு செல்வது வழக்கம்... தற்போது வேறு ஒரு உடையில் போய் தேர்வு எழுதச் சொல்வது எந்த வகையில் நியாயம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்து ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ் இ முஷாவரத்தின் பொதுச்செயலாலர் மசூம், இது அப்பட்டமான மத சுதந்திரத்தை, அடிப்படை உரிமைகளை மீறும் செயல்.. முஸ்லிம் மாணவியரை இந்த நுழைவுத் தேர்வில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சி. இதனால் சி.பி.எஸ்.இ., நிர்வாகம் இந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றார்.
அத்துடன் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 'இலகுவான உடைகள்' (light clothes) அணியக் கூடாது என கூறியுள்ளது. இது எந்த மாதிரியான உடைகளைக் குறிப்பிடுகிறது எனவும் அதில் விளக்கம் கொடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications