சுமூகமாக சட்டசபை தேர்தல்: 5 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் டெல்லியில் நாளை மறுநாள் நசீம் ஜைதி ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டசபை தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து 5 மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் டெல்லியில் நாளை மறுநாள் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்டது.

CEC to hold all party meet on Saturday

இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 19-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

வாக்கு சாவடிகளுக்கு பாதுகாப்பு, பிரசார ஒழுங்குகள், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 19-ந் தேதியன்று டெல்லியில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி சந்தித்து பேச உள்ளார்.

தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் சட்டசபை தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை நசீம் ஜைதி கேட்க இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+