சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்... தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி பிப். 10-ல் தமிழகம் வருகை?
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான குழுவினர் வரும் 10-ந் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபையின் பதவிக் காலம் மே 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வரும் 10-ந் தேதி தமிழகத்திலும் 11-ந் தேதி புதுச்சேரியிலும் ஆய்வு நடத்த உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நஜீம் ஜைதியுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவும் தமிழகம், புதுவைக்கு வருகை தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications