பிரச்சார மேடையில் லாலுவின் தலையில் விழுந்த மின்விசிறி: கட்சியினர் அதிர்ச்சி
பாட்னா: பீகாரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது மின்விசிறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் மோதிஹாரி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று கலந்து கொண்டார்.
Ceiling fan falls on Lalu Prasad Yadav during an election rally in Motihari, Bihar pic.twitter.com/kn37SKJsVT
— ANI (@ANI_news) October 16, 2015
மேடையில் அமர்ந்திருந்த அவர் மின்விசிறி சரியில்லையே என்று கூறிக் கொண்டிருக்கையிலேயே அது அறுந்து அவர் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக அவர் காயம் எதுவும் இன்றி தப்பித்தார். ஒரு வாரத்திற்குள் அவர் சந்தித்த இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை அர்வால் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அப்போது மேடையின் ஒரு பக்கம் சரிந்து விழுந்தது. மேடையின் மறுபக்கம் இருந்ததால் லாலு தப்பினார்.
லாலு அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து வருவது கட்சியினரை கவலை அடைய வைத்துள்ளது.