திப்பு சுல்தான், ஒரு அவுரங்க சீப்.. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மோகன்தாஸ் பை எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அவுரங்கசீப் பிறந்த நாளை கொண்டாடுவதும், திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதும் ஒன்றுதான் என்று பத்ம ஸ்ரீ விருது பெற்ற பிரபல தொழிலதிபர் மோகன்தாஸ் பை தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் வரும் 10ம் தேதி விழாவை கொண்டாட அரசு ஆயத்தமாகிவருகிறது.

Celebrating Tipu Jayanti is like celebrating Aurangzeb's: Pai

இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்தவும், பிரபல தொழிலதிபருமான மோகன்தாஸ் பை கூறுகையில், அவுரங்கசீப் ஒரு மத அடிப்படைவாதி. திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவது என்பது மத்திய அரசு அவுரங்கசீப் பிறந்த நாளை கொண்டாடுவதை போலவாகும். கர்நாடக அரசு இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறது. மைசூர் அரசரான உடையார், மைசூர் திவான் மிஸ்ரா இஸ்மாயில் போன்றோர் பிறந்த நாளை கொண்டாடட்டுமே. அதைவிடுத்து அரசியல் செய்வது சரியில்லை.

கோயில்கள், தேவாலயங்கள், கொங்கணி வழிபாட்டு தலங்களை இடித்தவர் திப்பு சுல்தான். இப்படி எல்லோருடைய கோபத்திற்கும் ஆளாகியுள்ளவரின் பிறந்த நாளை பிடிவாதமாக கொண்டாட அவசியமில்லை. இவ்வாறு மோகன்தாஸ் பை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+