படத்திற்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு தலைவர் கைது
டெல்லி: சத்தீஸ்கர் மாநில படமான மோர் தவ்கி கே பிஹாவ் படத்திற்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு சிஇஓ ராகேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
மத்திய ரயில்வே பணியாளர் அதிகாரியான ராகேஷ் குமார் கடந்த ஜனவரி மாதம் சென்சார் போர்டு சிஇஓவாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில மொழி படமான மோர் தாவ்கி கே பிஹாவ் தணிக்கை சான்றிதழ் பெற சென்சார் போர்டுக்கு வந்தது. தயாரிப்பாளர் படத்தை கடந்த 15ம் தேதி வெளியிட விரும்பியதால் விரைவில் சான்றிதழ் வழங்குமாறு தெரிவித்தார்.
இதையடுத்து சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் அந்த படத்திற்கு சான்றிதழ் வழங்க ரூ.70,000 லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு ஆலோசனைக் குழு உறுப்பினரான ஸ்ரீபதி மிஷ்ரா கைது செய்யப்பட்டார்.
மேலும் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட ராகேஷ் குமாரின் மும்பை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை திங்கட்கிழமை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications