கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு
கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி : கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு 8000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான முடிவு பிரதமர் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் நிதிப் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும், சர்க்கரை ஆலைகளும் விவசாயிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளன.

இதனால் அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு இன்று பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில், கரும்பு விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு விரிவான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதற்காக 8000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 1200 கோடி ரூபாய் மதிப்பில் கரும்பு கொள்முதல் நிலையங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 4400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்க்கரைக்கான இறக்குமதி வரியை 50 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடாக அதிகரிக்கவும், ஏற்றுமதிக்கான வரியை முழுமையாக நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications