For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளியை சீர்குலைக்க சதி: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தீபாவளியையொட்டி முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து அன்றைய தினம் நாட்டிலுள்ள முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி, தீபாவளியை சீர்குலைக்க சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதைத் தொடர்ந்து, இதுகுறித்து மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Central government on Tuesday alerted State govenments over a possible terror attack in the festive season of Diwali and has deployed additional forces for the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X