நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு
நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலிரத்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள பயனடைவர் என தெரிகிறது.
நீட் எனப்படும் தேசிய தகுதி காண் தேர்வின் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான முறையில் மருத்துவ படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

போராட்டம்
இதனால் ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயின்றோர் பாதிக்கப்படுவர் என்று கூறியும் மத்திய அரசு இதுகுறித்து பரிசீலிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் போராட்டங்களும், உயிரிழப்புகளும் நடந்ததுதான் மிச்சம். மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மாணவர்கள் எதிர்பார்ப்பு
வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இந்தாண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர்.

நீதியரசர்கள் யோசனை
கடந்த முறையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு வினாத்தாளை தயாரிக்காமல் மாநில பாடத்திட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்று நீதியரசர்கள் யோசனை தெரிவித்தனர்.

எந்த ஆண்டு
இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் நீட் தேர்வுக்கான வினாத்தாளில் மாநில பாடத்திட்டங்களையும் சேர்த்து பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ வினாத்தாளில் மாநில பாடத்திட்டமும் பரிசீலிக்கப்படும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications