தகவல் திருட்டு விவகாரம்.. பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டிஸ்
பேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: பேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகவல் திருட்டில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொலைபேசி நிறுவனங்களுடன், பேஸ்புக் பயனாளர்கள் விவரங்களை பகிர்ந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. பல்வேறு நாட்டில் உள்ள மொபைல் நிறுவனங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
தகவல்களை பகிர்ந்தது தொடர்பாக புகார் எழுந்ததுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, பேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி ஜூன் 20ம் தேதிக்குள் இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.