ஹெலிகாப்டரில் ஏறும்போது கால் தடுக்கி கீழே விழுந்தார் ஜெட்லி.. லேசான காயம்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஹெலிகாப்டரில் ஏறியபோது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தவறி விழுந்து லேசான காயம் அடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள உணவுப் பூங்காவை பார்வையிட்டு விட்டு ஹெலிகாப்டரில் ஏற முயன்ற மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தவறி விழுந்து காயம் அடைந்தார்.
ஹரித்வாரில் பதார்தா கிராமத்தில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி உணவுப் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை பார்வையிடுவதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஹெலிகாப்டரில் ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

பூங்காவை பார்வையிட்ட பிறகு அங்கிருந்து டெல்லி திரும்ப ஜேட்லி ஹெலிகாப்டரில் ஏற முயன்றார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான முதல்வர்களை தேர்ந்தெடுப்பதற்கான டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.












Click it and Unblock the Notifications