மேகாலயா, அருணாச்சலில் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ்... உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மேகாலயா மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அமலில் இருந்த ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இரு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்பை விட அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருந்தது.

போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த அவசர சட்டம் அமலுக்கு வந்தது. பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதி இன்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசார் உள்ளிட்டவர்களுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் முன்பிருந்ததைப்போல் தீவிரவாத அச்சுறுத்தல் இப்போது இல்லை. அங்குள்ள போராளிகள் ஒடுக்கப்பட்டு நிலைமை மேம்பாடு அடைந்து வருவதால் இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் சர்வதேச பொது மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கடந்த 31-3-2018 முதல் முற்றிலுமாக வாபஸ் பெற்றப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக உயர்அதிகாரி தெரிவித்துள்ளார். இதேபோன்று அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்திலும் 16 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலில் இருந்த இந்த சட்டம் தற்போது 8 காவல் நிலைய எல்லைகளுக்குள் மட்டும் அமலில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாகாலந்து, மணிப்பூர், ஜம்மு காஷ்மீரில் சில ஆண்டுகளாகவும் அசாமில் 1990 முதலும் சிறப்பு ஆயுதப்படை அவசரச்சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் மேகாலயாவில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அவசரச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு சமூக போராளி ஐரோம் ஷர்மிளா வரவேற்பு தெரிவித்துள்ளார். மணிப்பூரிலும் முற்றிலுமாக இந்தச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று ஷர்மிளா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆயுதப்படை சிறப்பு சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டுகள் போராடியவர் இரோம் ஷர்மிளா. தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொடைக்கானலில் குடியேறி வசித்து வரும் ஷர்மிளா மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவை மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications