சென்னை, டெல்லியில் "தேசிய முதியோர் நல மையம்"
டெல்லி: சென்னை, டெல்லியில் தேசிய முதியோர் நல மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்திலும், சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலும் மத்திய அரசு சார்பில் முதியோர் நல மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு பிரத்யேகமாக சிகிச்சை இந்த மையங்கள் சிகிச்சை அளிக்கும்.
200 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள தேசிய முதியோர் நல மையங்களில், மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்கவும், ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தங்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் டெல்லி, தமிழகம் மாநிலங்களின் சுகாதாரத் துறைகள் இடையே செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகின.
இதில் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் பி.பி.சர்மா, எய்ம்ஸ் இயக்குநர் எம்.சி.சர்மா, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications