நிலக்கரி சுரங்க விவகாரம்: அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சில நிலக்கரி சுரங்கங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் , கடந்த 1993 முதல் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 214 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது. அதே சமயத்தில் 42 நிலக்கரி சுரங்கங்களை இயக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், இது குறித்து அப்போது அவர் கூறியதாவது:
" நிலக்கரி சுரங்கங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டதால், மின்சாரம், இரும்பு, மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவை இதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.
புதிய ஒதுக்கீடுகள் அனைத்தும் எந்தவித ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நடைபெறும். சுரங்கம் ஒதுக்கீடு செய்யும் பணி இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் நிறைவடையும். நிலக்கரி சுரங்கங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் . எதிர்காலத்தில் சிமென்ட் மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகளுக்கு போதிய நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications