காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதங்கள் அவகாசம் தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திடீர் மனு!
காவிரி இறுதித் தீர்ப்பில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
Recommended Video

டெல்லி : காவிரி இறுதித் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நீரை 4 மாநிலங்கள் பங்கிட்டு கொள்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் ஸ்கீம் என்றே நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஸ்கீம் என்றால் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின்படி அது காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழக அரசு சொல்லி வருகிறது.
ஆனால் மத்திய அரசும், கர்நாடக அரசும் ஸ்கீம் என்றால் ஒரு அமைப்பு தான் என்று சொல்லி வருகின்றன. உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்பதால் மத்திய அரசு மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் தங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுவதற்கு முன்னர் மத்திய அரசு முந்திக்கொண்டு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications