தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் வங்கிக்கடன் படிப்படியாக ரத்து- சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திராவில் ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாயத்திற்கான வங்கிக் கடனிலிருந்து தலா ரூபாய் 50 ஆயிரம் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் ஹைதராபாத்தில் தெரிவித்தபோது, தேர்தலின் பிரசாரத்தில், "ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடனை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தோம்.

அதன்படி தற்போது ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1.50 லட்சம் வரை விவசாயக் கடன் ரத்து செய்ய உள்ளோம்.
இதில் முதல் கட்டமாக, வரும் 10 ஆம் தேதியிலிருந்து விவசாயிகளின் வங்கிக் கடன் ரூபாய் 50 ஆயிரத்தை ரத்து செய்கிறோம்.
இதன் மூலம் கிட்டதட்ட 22.79 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். மேலும், பயனாளிகளின் பட்டியல் வரும் 6 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications