வேண்டுதலை நிறைவேற்றாவிட்டால் அவ்வளவு தான்.. கடவுளுக்கே தண்டனை கொடுக்கும் மக்கள்.. இந்தியாவில்தான்
ராய்பூர்: வேண்டுதல்களை நிறைவேற்றாவிட்டால் கடவுளுக்கும் தண்டனை வழங்கும் வினோதமான பழக்கங்கள் சத்தீஷ்கர் மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது. பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுகள்களை கூண்டில் ஏற்றி தண்டனை வழங்கி வருகிறார்கள். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அந்த தெய்வங்களை கோவில்களில் இருந்து அகற்றுவது, கோவில்களுக்கு பின்புறம் மரத்தடியில் வசிக்க வைப்பது என தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.
தங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் பெரும்பாலான மக்கள் உடனே கடவுளிடம் தான் வேண்டிக்கொள்கிறார்கள். இதேபோன்று ஒரு காரியம் நடக்கம் வேண்டும் என்றாலும் அதற்கும் கடவுளிடம் தான் வேண்டிக் கொள்கிறார்கள். மாணவர்கள் பரீட்சையில் எப்படியாவது பாஸ் ஆகிவிட வேண்டும் என்று வேண்டுவார்கள். பெரியவர்கள் தங்களுக்கு உள்ள கஷ்டங்கள் தீர வெண்டும் என்று வேண்டுதல் வைக்கின்றனர். இப்படி ஒவ்வொரு தரப்பிற்கும் ஒரு வேண்டுதல் இருக்கும்.

இவ்வாறு கடவுளிடம் வேண்டுதல் வைக்கும் பெரும்பாலான மக்கள், அந்த கஷ்டம் தீர்ந்துவிட்டாலோ, வேண்டுதல் நிறைவேறினாலோ நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அதே சமயம் அந்த வேண்டுதல் நிறைவேறாவிட்டால் நாம் விரதங்களை சரியாக மேற்கொள்ளவில்லை என்று தங்களுக்குள் குறைபட்டுக் கொன்று மீண்டும் கடவுளை தீவிரமாக கும்பிடுவார்கள். பொதுவாக இப்படியான விஷயங்களை தான் நாம் பார்த்திருக்க முடியும்.
ஆனால் இதற்கு எல்லாம் மாறாக வேண்டுதல்களை நிறைவேற்றாவிட்டால் கடவுளாக இருந்தாலும் தண்டனை விதிக்கப்படுகிறது. சத்தீஷ்கர் மாநிலத்தில் தான் இப்படி வினோதமான பழக்கத்தினை செய்து வருகிறார்கள். அதாவது பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுகள்களை கூண்டில் ஏற்றி தண்டனை வழங்கி வருகிறார்கள். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அந்த தெய்வங்களை கோவில்களில் இருந்து அகற்றுவது, கோவில்களுக்கு பின்புறம் மரத்தடியில் வசிக்க வைப்பது என தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.
தண்டனைக் காலம் முடிந்த பின் மீண்டும் கோவில்களுக்கு அந்த தெய்வங்கள் வைக்கப்படுகின்றன. இப்படி வினோதமான ரூல்ஸ்களை சத்தீஷ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இது பற்றிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் 70 சதவீதம் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கு வசிக்கும் கோண்டு, பத்ரா, ஹ்ல்பா, துர்வா போன்ற பழங்குடியின மக்கள் விசித்திரமான பழக்கங்களை பின்பற்றி வருகிறார்கள். அப்படித்தான் அங்குள்ள பங்காரம்மன் கோவிலில் திருவிழாவின் போது மற்ற சிறு தெய்வங்கள் மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றாமல் இருந்தால் அந்த தெய்வங்கள் மீது குற்றம் சுமத்தலாம்.
தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்தும் விவசாயம் பொய்த்து போனாலோ, நோய்கள் குணம் ஆகாமல் போனாலோ, நீண்ட நாள் பிரச்சினை சரியாகாமல் போனாலோ அந்த தெயவத்தின் மீது மக்கள் குற்றம் சுமத்தலாம். கோவில் திருவிழாவின் போது பங்காரம்மன் முன்னிலையில், மக்கள் எந்தெந்த தெய்வங்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றாமல் போனதோ அந்த தெய்வங்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்.
பங்காரம்மன் கோவில் கடவுளின் நீதிமன்றத்தில் கிராம தலைவர்கள் தான் வழக்கறிஞர்கள். பறவைகள், விலங்குகள் தான் சாட்சியாளர்கள். பங்காரம்மனின் அறிவுறுத்தல்களுக்கு குரல் கொடுப்பதாக நம்பப்படும் கிராம தலைவர்களால் இதற்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அந்த தெய்வத்திற்கு தண்டனை வழங்கப்படும்.
அதாவது குற்றங்கள் நிரூபிக்கப்படும் தெய்வங்கள் அந்த கோவிலில் இருந்து ஓராண்டுக்கு வெளியேற்றப்படுவது, திருவிழா கொடுக்கப்படாமல் இருப்பது, தெய்வத்தை கோவிலுக்கு வெளியே மரத்தின் கீழ் தங்க வைப்பது போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தண்டனைக் காலம் முடிந்த பிறகு மீண்டும் அந்த தெய்வங்கள் கோவிலுக்குள் எடுத்து வரப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications