ரூ118 கோடி மதிப்பிலான 1.2 டன் போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய சென்னை நபர்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவை உலுக்கியிருக்கும் ரூ118 கோடி மதிப்பிலான 1.2 டன் போதைப் பொருள் கடத்தலில் சென்னையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் சிக்கியுள்ளான்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் நகரில் வருவாய் நுண்ணறிவு பிரிவினர் அண்மையில் நடத்திய அதிரடி வேட்டையில் ரூ.118 கோடி மதிப்புள்ள ஆயிரத்து 175 கிலோ எடையுள்ள கேட்டமைன் என்ற போதைப்பொருள் சிக்கியது. இந்த வழக்கில் இதுவரை 11 பேர் சிக்கி உள்ளனர்.
இவர்களில் சென்னையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் ஒருவர். "சென்னையில் அய்யாமணி, சகாயன் ஆகிய இருவர் மூலமாக போதைப்பொருளை வினியோகம் செய்ததாகவும் இதன் மூலம் தனக்கு 13 சதவீதம் கமிஷன் கிடைக்கும்" என்று போலீசில் செந்தில்குமார் கூறியுள்ளான்.
அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் மேலும் பலர் சிக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications