குண்டு வெடிப்பு விசாரணை-சென்னை போலீஸ் பெங்களூர் விரைவு: ஆந்திராவிலும் விசாரணை
பெங்களூர்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் பெங்களூர் வந்துள்ளனர். ஆந்திராவிலும் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
பெங்களூரிலிருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்கு சென்ற ரயில், சென்னை சென்ட்ரலுக்கு வந்தபோது, திடீரென அதில் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் உயிரிழந்தார், 14 பேர் படுகாயமடைந்தனர்.

ரயில் பெங்களூரில் இருந்து கிளம்பியதால் பெங்களூர் ரயில் நிலையத்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கர்நாடக போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, வட மாநிலத்தை சேர்ந்த சந்தேகத்திற்கிடமான ஒருவர் ரயிலில் ஏறிய காட்சியை போலீசார் பார்த்தனர். ஆனால் அவர் சென்னைக்கு வந்து சேராதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனவே சென்ட்ரல் ரயில் நிலைய தாக்குதலுக்கு பெங்களூரில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இவ்வழக்கை விசாரித்து வரும் தமிழக சிபிசிஐடி போலீசார், இன்று காலை விமானம் மூலம் பெங்களூர் வந்தனர். சிபிசிஐடி பிரிவின் டிஎஸ்பிக்கள், அன்பு, ஜெயகவுரி ஆகியோர் கொண்ட 10பேர் குழு பெங்களூர் வந்துள்ளது.
கர்நாடக போலீசாரின் உதவியுடன் அடுத்தகட்ட விசாரணையை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். ரயில் நிலையத்துக்கு சென்று சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்க உள்ளனர். குண்டுவெடிப்பு நடத்தப்பட்ட ரயில், ஆந்திராவழியாக செல்வது என்பதால் ஆந்திர போலீசாரின் உதவியுடன் அம்மாநிலத்திலும் தமிழக போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு ஐஜி மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறுகையில் குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூரில் விசாரணை தொடங்கியுல்ளோம். ஆந்திர காவல்துறையினருடனும் இணைந்து சிபிசிஐடி காவல்துறையினர் பணியாற்றுகிறார்கள். தமிழகம், ஆந்திராவில் முழு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications