முஸ்லிம்களை ரயிலில் இருந்து இறக்கிவிட்டதற்கு பழிவாங்க சென்னை ரயிலில் குண்டு வைத்த சிமி தீவிரவாதிகள்
பெங்களூரு: முஸ்லிம்களை ரயிலில் இருந்து இறக்கிவிட்டதற்கு பழிக்கு பழிவாங்குவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூரு-குவஹாத்தி ரயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம் என்று ஒடிஷாவில் பிடிபட்ட சிமி தீவிரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே 1-ந் தேதி பெங்களூரு-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. சிறிது நேரதில் அந்த ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடிப்பில் ஆந்திராவை சேர்ந்த ஸ்வாதி என்ற இளம்பெண் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒடிஷாவில் சிமி தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மத்திய பிரதேச சிறையில் இருந்து தப்பியவர்கள். ஆகையால் மத்திய அம்மாநில தீவிரவாத தடுப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பிடிபட்ட தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை ரயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது தாங்கள்தான் என மூவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். அதாவது 2012ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் நியூஜல்பைகுரி ரயில் நிலையத்தில் 14 முஸ்லிம்கள் பெங்களூர்-குவஹாத்தி ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
இச்சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில் பெங்களூர்-குவஹாத்தி ரயிலில் குண்டுகளை வைத்தோம்; குறிப்பாக சென்னை-பெங்களூர் மார்க்கத்தில் பாதுகாப்பு கெடுபிடி குறைவாக இருக்கும் என்பதால் சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடைந்த உடன் குண்டுகள் வெடிக்குமாறு பொருத்தினோம் எனவும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.
அதேபோல் 2014-ம் ஆண்டு புனே காவல்நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கும் தாமே பொறுப்பு மற்றொரு தீவிரவாதி வாக்குமூலம் அளித்திருக்கிறார். 2012ஆம் ஆண்டு சிமி தீவிரவாதி ஒருவரை போலீசார் கொன்றதற்கு பழிவாங்க அந்த குண்டுவெடிப்பை நிகழ்ச்சியதாகவும் அந்த தீவிரவாதி தெரிவித்திருக்கிறார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications