For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காசா பற்றி ட்வீட் செய்த எழுத்தாளர் சேத்தன் பகத்: திட்டித் தீர்க்கும் மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: காசா விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து மக்களிடம் திட்டு வாங்கியுள்ளார் எழுத்தாளர் சேத்தன் பகத்.

பிரபல எழுத்தாளரான சேத்தன் பகதுக்கும் ட்விட்டருக்கும் ராசியே சரி இல்லை. அவர் பாட்டுக்கு நான் எல்லாம் நல்லவன் என்கிறது போன்று கருத்து தெரிவிக்க மக்களிடம் கெட்ட பெயர் எடுத்துவிடுகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது காசா விவகாரம் குறித்து ட்வீட் செய்ததும் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.

காசா

காசாவில் நடப்பது வருத்தம் அளிக்கிறது. இது நியாயம் இல்லை. ஆனால் சிலநேரம் தீவிரவாத அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவாளர்களும் இப்படித் தான் நடக்கிறார்கள் என்று பகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்

இஸ்ரேல் தனது நிலையை தெரிவித்துவிட்டது. இது இப்போதே நிறுத்தப்பட வேண்டும். அமைதிக்கான பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க வேண்டும் என்றார் பகத்.

இஸ்லாமிய நாடுகள்

காசா தாக்கப்பட்டபோது அந்த பகுதியில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் ஒரு வார்த்தை கூட கூறவும் இல்லை, தலையிடவும் இல்லை என்று பகத் தெரிவித்துள்ளார்.

திட்டு

திட்டு

பகத்தின் ட்வீட்களை பார்த்த மக்கள் பாலஸ்தீனம் பற்றி முதலில் படித்துவிட்டு வந்து கருத்து தெரிவியுங்கள் என்று கூறி திட்டியுள்ளனர்.

விவாதம்

மக்கள் உங்களை திட்டினால் அவர்களிடம் பதில் இல்லை மற்றும் விவாதத்தில் நீங்கள் வென்றுவிட்டீர்கள். இது போன்று கருத்து தெரிவிப்பர்களை பார்த்து களைத்துவிட்டேன் என்று பகத் தெரிவித்துள்ளார்.

English summary
Writer Chetan Bhagat's tweets about Gaza turned against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X