பாஜகவுக்கே தெரியும்.. மக்கள் நம்பமாட்டாங்க! காங்கிரஸை சத்தீஸ்கர் மலைபோல் நம்புது.. முதல்வர் பூபேஷ்
ராய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி மீது சத்தீஸ்கர் மக்கள் எப்போதும் நம்பிக்கை வைத்து உள்ளார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்து உள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், ராஜஸ்தானில் நவம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றிவாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சத்தீஸ்கர் மக்களிடம் பாஜக எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை.
ஏனென்றால் தங்களின் வாக்குறுதியை சத்தீஸ்கர் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியும். சத்தீஸ்கர் மக்கள் எப்போதுமே பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசு மீதே நம்பிக்கை வைத்து உள்ளார்கள்." என்றார். சத்தீஸ்கர் தேர்தலில் துர்க் மாவட்டத்தில் உள்ள படான் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த திங்கட்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்த பூபேஷ் பாகேல் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் வலுவான மண்டலமாக இது பார்க்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 12 தொகுதிகளில் 11 தொகுதிகளை இந்த மண்டலத்தில் கைப்பற்றியது காங்கிரஸ். சத்தீஸ்கர் முதலமைச்சர் பாகேலின் விமர்சனத்துக்கு பதிலளித்து உள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக துணைத் தலைவருமான ரமன் சிங், "பூபேஷ் பாகெலின் ஆட்சிகாலம் இன்னும் 40 நாட்களுக்குதான்." என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications