Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக 15 சீட்டுகளை தாண்டுதான்னு பார்ப்போம்.. கலாய்த்த சத்தீஸ்கர் முதலமைச்சர்! திக் திக் டிசம்பர் 3

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 15 சீட்டுகளுக்கு மேல் வெற்றிபெறுகிறதா என்று பார்ப்போம் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்து உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிகாலம் நிறைவடையும் நிலையில், கடந்த நவம்பர் 7 ஆம் தேதி மற்றும் நவம்பர் 17 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இதில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

Chhattisgarh CM Bhupesh Baghel said will see BJP wins more than 15 seats

இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பாஜகவை மீண்டும் கடுமையாக விமர்சித்து உள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் அவர்களால் 15 இடங்களாவது வெற்றி பெற முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்று அவர் சவால் விடுத்து உள்ளார். பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ரமன் சிங் சத்தீஸ்கர் மாநில தேர்தலில் 55 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் வகையில் பூபேஷ் பாகேல் பேசுகையில், "ரமன் சிங் புகழ் உச்சத்தில் இருந்தபோதுகூட அவரால் சத்தீஸ்கரில் 52 இடங்களைத் தாண்ட முடியவில்லை. இப்போது, அவர்கள் எப்படி 55 இடங்களில் வெல்ல முடியும்? அவர் தனது தொண்டர்களை ஊக்கப்படுத்த இதையெல்லாம் சொல்கிறார். தேர்தல் முடிவுகள் வந்ததும், அவர்கள் 15 இடங்களைத் தாண்டுகிறார்களா என்பது அனைவருக்கும் தெரியும்." என்றார்.

நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ரமன் சிங் பேசுகையில், "20 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 20 தொகுதிகளில் குறைந்தது 14 இடங்களில் பாஜக வெற்றி பெறும்." என்றார். அம்மாநில துணை முதலமைச்சர் டிஎஸ் சிங் தியோ பேசுகையில் சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்ம் என்று நம்பிக்கை தெரிவித்தார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டிஎஸ் சிங் தியோ இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். வாக்குப்பதிவு சதவீதம் நல்ல நிலையில் உள்ளது. சராசரி வாக்குப்பதிவு சதவீதம் சுமார் 72 - 73 சதவீதம் இருக்கலாம். காங்கிரஸ் மேற்கொண்ட பணிகளின் நேரடி தாக்கம் தேர்தல் முடிவுகளில் இருக்கும். எனது தொகுதியிலும் காங்கிரஸ் வெல்லும்." என்றார். சத்தீஸ்கரில் 2003 முதல் 2018 வரை தொடர்ந்து பாஜக ஆட்சி செய்து வந்தது. ஆனால், 2018 தேர்தலில் அக்கட்சி காங்கிரஸின் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இழந்த சத்தீஸ்கரை மீட்க வேண்டும் என்ற முனைப்புடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், மாநில பாஜக நிர்வாகிகள் சத்தீஸ்கரில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அமித்ஷா பூபேஷ் பாகேலை "பிரீபெய்டு முதலமைச்சர்" என்ர சாடினர். லட்சம் வாங்கிக்கொண்டு பூபேஷ் பாகேல் பணி செய்வதாக அமித்ஷா குற்றம்சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+