For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்துக்களை மதம் மாற்ற செய்ய வந்தால் தலையை வெட்டிடுங்க.. சத்தீஸ்கர் சாமியார் பேச்சால் சர்ச்சை

Google Oneindia Tamil News

சுர்குஜா: மதம் மாற்றம் செய்ய சிறுபான்மையினர் உங்கள் வீடுகளுக்கு வந்தால் அவர்களது தலையை வெட்ட வேண்டும் என்று இந்து சாமியார் பரமாத்மானந்த் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.

2017-ம் ஆண்டு ஹரியானாவில் பசு பாதுகாப்பு இயக்கத்தினரால் பெஹ்லு கான் என்பவர் அடித்தே கொல்லப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெறுகிற வன்முறைகளை பிரதமர் மோடி கண்டித்திருந்தார்.

திமுக உட்கட்சி தேர்தல்... 6 மாதத்திற்கு அவகாசம் கோரும் தலைமை... அனுமதி மறுக்கும் தேர்தல் ஆணையம்..! திமுக உட்கட்சி தேர்தல்... 6 மாதத்திற்கு அவகாசம் கோரும் தலைமை... அனுமதி மறுக்கும் தேர்தல் ஆணையம்..!

ஆனால் பசு பாதுகாப்பு என்ற பெயரிலான படுகொலைகளை ஆதரித்தவர் சாமியார் பரமாத்மானந்த். அத்துடன் இத்தகைய கொலையாளிகளுக்கு பசு பாதுகாவலர்கள் என்கிற பட்டம் தந்து அரசு மரியாதை அளிக்க வேண்டும் எனவும் பேசியவரும் இந்த சாமியார் பரமாத்மானந்த்தான்.

பாஜக தலைவர்கள் முன்னிலையில்..

பாஜக தலைவர்கள் முன்னிலையில்..

தற்போது மதமாற்ற விவகாரத்தில் வன்முறையை தூண்டும் வகையில் சாமியார் பரமாத்மானந்த் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா என்ற இடத்தில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

கோடாலி எதற்கு?

கோடாலி எதற்கு?

இந்த கூட்டத்தில் சாமியார் பரமாத்மானந்த் பேசியதாவது; நான் ஒரு துறவி. நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இங்கே பேசிய ராம்விசார் ஜியும் அதைத்தான் கூறினார். அதை நான் சற்று விரிவாக சொல்ல நினைக்கிறேன். உங்கள் வீடுகளில் தடிகளை வைத்திருங்கள். நம்முடைய கிராமங்கள் மக்கள் கை கோடாலிகளை வைத்திருக்கிறார்கள். எதற்காக இந்த கோடாலி வைத்திருக்கிறார்கள்?

கோடாலியால் தலையை வெட்டுங்க

கோடாலியால் தலையை வெட்டுங்க

மதமாற்றம் செய்ய வருகிறவர்களின் தலையை வெட்டத்தான் இந்த கோடாலியை வைத்திருக்கிறார்கள். ஒரு சாமியராக இருந்து கொண்டு வெறுப்பை தூண்டும் பேச்சை பேசுவதாக என் மீது குற்றம்சாட்டலாம். சில நேரங்களில் தீயை பற்ற வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறதே... மீண்டும் சொல்கிறேன்.. உங்கள் வீடு, தெரு, கிராமம் எங்கேயாவது மதமாற்றம் செய்ய வருகிறவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு மன்னிப்பு எல்லாம் கொடுக்காதீங்க.. இவ்வாறு சாமியார் பரமாத்மானந்த் பேசினார்.

பேசி பாருங்க..சுட்டுவிடுங்க

பேசி பாருங்க..சுட்டுவிடுங்க

அத்துடன் இந்த வன்முறையை எப்படிச் செய்ய வேண்டும் என்கிற ஒரு பார்முலாவையும் சாமியார் பரமாத்மானந்த் அதே கூட்டத்தில் சொல்லி இருக்கிறார். அதாவது, மதமாற்றம் செய்ய வருகிறவர்களை முதலில் தடுத்து நிறுத்துங்கள். அடுத்ததாக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். பின்னர் சுட்டுவிடுங்கள் என்றார் சாமியார் பரமாத்மானந்த். அவரது இந்த பேச்சு பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Hindu Saint Swami Parmatmanand said that Hindus should kill minorities who involved in forced conversions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X