'பாரத் மாதா கி ஜெய்' என்று கூற மறுப்பவர்களின் தாடையை உடையுங்கள்: சத்தீஸ்கர் அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
ராய்பூர்: பாரத் மாதா கி ஜெய் என்று கூற மறுப்பவர்களின் தாடையை உடையுங்கள் என சத்தீஸ்கர் அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பாரத் மாதா கி ஜெய் பற்றிய சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சத்தீஸ்கர் மாநில அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால். பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் பாரத் மாதா கி ஜெய் பற்றி பேசியுள்ளார்.

கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாவது,
பாரத் மாதா கி ஜெய் என்று கூற மறுப்பவர்களின் தாடையை உடையுங்கள். இந்துஸ்தானில் பிறந்து வளர்ந்து, இறந்த பிறகு இங்கு புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் பாரத் மாதா கி ஜெய் என்று கண்டிப்பாக கூற வேண்டும் என்றார்.
அகர்வாலின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications