Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹமாஸ் பயங்கரவாதிகள் பாணியில் வனப் பகுதியில் நீண்ட சுரங்கம் அமைத்த மாவோயிஸ்டுகள்- சத்தீஸ்கர் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: பாலஸ்தீனத்தின் ஹமாய் பயங்கரவாதிகளைப் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பயன்படுத்தி வந்த சுரங்கத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவில் ஆயுதப் புரட்சி மூலம் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பது மாவோயிஸ்டுகள் கொள்கை. மாவோயிஸ்டுகள் தற்போதைய நிலையில் சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லைகளில் வனப்பகுதிகளில் மட்டுமே பதுங்கி இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முந்தைய மாவோயிஸ்டுகளின் பலம் இப்போது இல்லை என்பது நிதர்சனம்.

Chhattisgarh: Securtiy Forces Capture Maoists tunnel in Dantewada

இருந்த போதும் அவ்வப்போது தங்களது இருப்பை வெளிக்காட்ட பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவின் போது 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நடத்தி இருந்தனர். மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை அரசுகள் தீவிரமாக மேற்கொள்வதால் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பழங்குடி மக்கள் இப்போது மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது திடீரென மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தேடுதல் நடவடிக்கையின் போது சத்தீஸ்கர் சுக்மா மாவட்டம் தண்டேவடா வனப்பகுதியில் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்பதுங்கு குழிக்குள் இறங்கிய பாதுகாப்பு படையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அது பதுங்கு குழியே அல்ல.. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட சுரங்க பாதையை மாவோயிஸ்டுகள் உருவாக்கி இருந்தனர். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் உருவாக்கிய சுரங்க பாதைகளை போல் மாவோயிஸ்டுகள் இந்த பாதையை உருவாக்கி இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் உருவாக்கி வைத்துள்ள இதர கட்டுமானங்களையும் அழிக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+