லலித் மோடி விவகாரத்தில் இங்கிலாந்துக்கு எழுதப்பட்ட கடிதங்களை பகிரங்கப்படுத்துக.. ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரத்தில் இங்கிலாந்துக்கு எழுதப்பட்ட கடிதங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Chidambaram demands release of letters to UK on Lalit Modi

லலித் மோடி பயண ஆவணங்களை பெற மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில், இங்கிலாந்து அரசுக்கு எழுதிய அனைத்து கடிதங்களையும் வெளியிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், வெளிப்படத்தன்மையை கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில், லலித் மோடி விவகாரத்தில் இங்கிலாந்து தூதருக்கு சுஷ்மா சுவராஜ் எழுதிய கடிதங்களை மத்திய அரசு வெளியிடவேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, லலித் மோடிக்கு எதிராக ஏன் நடவடிக்கைவில்லை என்று இங்கிலாந்து அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் லலித் மோடியின் பாஸ்போர்ட்டை இந்திய அரசு முடக்கி வைத்துள்ளதாலும், அவருக்கு இங்கிலாந்து அரசு வழங்கிய விசா காலம் காலாவதியாகி போய் விட்டதாலும், லலித் மோடியை உடனடியாக நாடு கடத்த வேண்டும் எனவும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+