வாட்ஸ் ஆப் மூலம் பரவும் சரிதா நாயரின் ஆபாச வீடியோ!
திருவனந்தபுரம்: வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் தனது நிர்வாணப் படங்கள் பரப்பப்படுவதைத் தடுக்கக் கோரி கேரள நீதிமன்றத்தில் சரிதா நாயர் மனு செய்துள்ளார்.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இவரது ஆபாச வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரிதா நாயரின் வீடியோ:
சரிதா நாயரின் ஆபாச வீடியோ இணையத்தில் பரவி ஒரு மணி நேரத்தில் ஏராளமானோர் அதை கண்டு களித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சரிதா நாயர் பத்தினம்திட்டா நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மரியாதையை சீர்குலைக்கும் முடிவு:
அதில், வாட்ஸ் ஆப், சமூக வலைதளம் மூலம் எனது பெயரில் ஆபாச வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. ஒரு பெண்ணின் மரியாதையை சீர்குலைக்கும் வகையிலும், காமத்தை தூண்டும் வகையிலும் ஆபாச காட்சியை பரப்பியது எனக்கு மிகுந்த மன வேதனையையும், உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் விசாரணை:
எனவே தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் படி ஆபாச வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்த பத்தினம்திட்டா போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டது.

பின்னணியில் அரசியல்:
பின்னர் சரிதா நாயர் நிருபர்களிடம் கூறுகையில், "ஆபாச வீடியோவை பரப்பியவர்களின் பின்னணியில் அரசியல் உள்ளது. வீடியோ வெளிவருவதற்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே எனக்கு பல மிரட்டல்கள் வந்தன.

வீடியோ பேரால் மிரட்டல்:
என்னுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவிட்டால் தங்களிடம் உள்ள ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என்றும் கூறினர்.

விரைவில் வெளிவரும்:
இதன் பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என்பது குறித்து எனக்கு தெரியும். அவர்களின் பெயர் விபரங்களை நான் போலீசிடம் விரைவில் தெரிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications