முதல்வர் ஓபிஎஸ் பயணம் திடீர் ரத்து... வக்கீல்களுடன் டெல்லியில் அவசர ஆலோசனை
டெல்லியில் வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக அரசே அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த முடியுமா என்பது குறித்து அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லி: முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்புவதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து டெல்லி வக்கீல்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக் கோரரி நடைபெற்று வரும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. சென்னை, மதுரை, சேலம் என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து இளைஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்றார். இன்று காலை அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

தமிழகத்துக்கு உறுதுனையாக இருக்கும்
அப்போது ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உதவ இயலாது என மோடி தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுனையாக இருக்கும் என்றும் மோடி கூறினார்.

விரைவில் காண்பீர்கள்
இதைத்தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என்றார். இதையடுத்து தமிழக அரசே ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

சென்னை பயணம் ரத்து
இந்நிலையில் சென்னை திரும்பும் தனது பயணத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரத்து செய்துள்ளார். அதேநேரத்தில் டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவசர சட்டம் இயற்ற முடியுமா
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசே அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியுமா என அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுக் கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications