இந்தியா,தென்கிழக்கு ஆசியா நாடுகளை குறி வைத்து இயங்கும் சீனா 'ஹேக்கர்ஸ்'
டெல்லி: இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசு சார்ந்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளாக சீனா உளவு பார்த்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து பையர் ஐ என்ற இணையதள பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2005ம் ஆண்டு முதல் ஹேக்கர்கள், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கிய தகவல்களை திருடி வருகின்றனர். அதுவும் அரசு விவரங்கள், அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்களின் மின்னஞ்சல்கள், பொருளாதாரம், ராணுவம் சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைதான் இவர்கள் திருடி வருகின்றனர்.,
மேலும் சீனா குறித்து எழுதும் பத்திரிகையாளர்கள், கட்டுமானம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களும் வேவு பார்க்கப்படுகின்றன. போலி என கண்டுபிடிக்க முடியாத மின்னஞ்சல்களை அனுப்பி அதன் மூலம் அரசு துறைகளின் தகவல்கள் களவாடப்படுகின்றன.
ஆனால் அரசு மற்றும் நிறுவன அதிகாரிகள் இதை அறிய முடியாத வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனராம் இந்த ஹேக்கர்கள். இதற்கான சர்வர்கள் தற்போதும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஹேக்கர்களில் பெரும்பாலானோர் சீனர்கள்தானாம்.. இவர்களுக்கு பின்னணியில் சீனா அரசுதான் இருக்கிறதாம்..
ஆனால் இக் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு, மெக்கபி நிறுவனம் சீனா மீது இது போன்ற குற்றச்சாட்டை சுமத்தியது. அப்போதும் சீனா மறுப்பு தெரிவித்தது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications