இந்தியா,தென்கிழக்கு ஆசியா நாடுகளை குறி வைத்து இயங்கும் சீனா 'ஹேக்கர்ஸ்'
டெல்லி: இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசு சார்ந்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளாக சீனா உளவு பார்த்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து பையர் ஐ என்ற இணையதள பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2005ம் ஆண்டு முதல் ஹேக்கர்கள், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கிய தகவல்களை திருடி வருகின்றனர். அதுவும் அரசு விவரங்கள், அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்களின் மின்னஞ்சல்கள், பொருளாதாரம், ராணுவம் சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைதான் இவர்கள் திருடி வருகின்றனர்.,
மேலும் சீனா குறித்து எழுதும் பத்திரிகையாளர்கள், கட்டுமானம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களும் வேவு பார்க்கப்படுகின்றன. போலி என கண்டுபிடிக்க முடியாத மின்னஞ்சல்களை அனுப்பி அதன் மூலம் அரசு துறைகளின் தகவல்கள் களவாடப்படுகின்றன.
ஆனால் அரசு மற்றும் நிறுவன அதிகாரிகள் இதை அறிய முடியாத வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனராம் இந்த ஹேக்கர்கள். இதற்கான சர்வர்கள் தற்போதும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஹேக்கர்களில் பெரும்பாலானோர் சீனர்கள்தானாம்.. இவர்களுக்கு பின்னணியில் சீனா அரசுதான் இருக்கிறதாம்..
ஆனால் இக் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு, மெக்கபி நிறுவனம் சீனா மீது இது போன்ற குற்றச்சாட்டை சுமத்தியது. அப்போதும் சீனா மறுப்பு தெரிவித்தது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications