உத்தரகாண்ட்டில் ஊடுருவிய சீனா ராணுவ ஹெலிகாப்டர்... ஹரீஷ் ராவத் தகவல்
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்துக்குள் சீனா ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஊடுருவியதை அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் உறுதிசெய்திருக்கிறார்.
நாட்டின் லடாக் மற்றும் அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதில் அருணாச்சல் மாநிலத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக தங்களது நாட்டின் ஒருபகுதியாக சீனா கூறிவருகிறது.
இதற்கு இந்தியா மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கண்டனமும் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் பொருட்படுத்தாத சீனா ஊடுருவலை தொடர் கதையாக வைத்திருக்கிறது.

அருணாச்சலில் ஊடுருவல்
கடந்த மாதமும் கூட அருணாச்சல பிரதேசத்துக்குள் சீனா ஊடுருவியது. அப்போது இருதரப்பு வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியா- சீனா இடையே பதற்றம் உருவானது.

உத்தரகாண்ட்டில் ஊடுவல்
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்துக்குள் சீனாவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஊடுவியிருக்கிறது. இந்திய பகுதியில் 5 நிமிடங்கள் பறந்த இந்த ஹெலிகாப்டர் பின்னர் சீனாவுக்குள் சென்றுள்ளது. இது தொடர்பாக இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

உரிய விசாரணை
சீனாவின் இந்த ஊடுருவல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, எல்லையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்களிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. சீன ஹெலிகாப்டர் ஊடுருவியது பற்றி தீவிர விசாரணை நடத்தப்படும் என்றார்,

ஊடுருவல் உண்மைதான்...
உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறுகையில், இதுதொடர்பான செய்திகள் உண்மையானதே. நம்முடைய எல்லைப் பகுதியானது இப்போது வரையில் அமைதியாக உள்ளது. முதலில் இருந்தே நாங்கள் கண்காணிப்பை அதிகரிக்க கேட்டுக் கொண்டோம் எனக் கூறியுள்ளார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications