சாலையின் நடுவே அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 24 பயணிகள்...

Subscribe to Oneindia Tamil

இடாநகர் : அசாம் மாநிலத்தில் 19 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சாலையின் நடுவே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பவன் ஹன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நாகர்லகுனில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதில் 19 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் என 24 பேர் பயணம் செய்தனர்.

helicopter

அசாம்-அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள்ள இடாநகரை இணைக்கும் கோஹ்பூர் பாலிஜன் என்ற இடத்தில் சென்றபோது மோசமான வானிலை நிலவியதால் தொடர்ந்து ஹெலிகாப்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, இடாநகர்-கோஹ்பூர் சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கூடிய மக்கள் ஹெலிகாப்டரை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+