டெல்லியில் யாருக்கு அதிகாரம்.. மீண்டும் சுப்ரீம் கோர்ட் படியேறிய முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லியில் சில துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்குமான அதிகார பிரச்சனையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் சில துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்குமான அதிகார பிரச்சனையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
டெல்லியில் அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது, துணை நிலை ஆளுநருக்கு கிடையாது என்ற உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு உன் தீர்ப்பு வழங்கியது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் பிரச்சனை நிலவி வந்தது. முதல்வரின் வரம்பில் துணை ஆளுநர் ஈடுபட்ட பல நடவடிக்கை எடுத்தது பிரச்சனை ஆனது.
இதனால் உண்மையான அதிகாரம் யாருக்கு இருக்கிறது என விளக்கம் கேட்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.அதன்படி டெல்லியில் அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. துணை ஆளுநருக்கோ, ஆளுனருக்கோ தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்றுள்ளது.
இதனால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சில முக்கிய அதிகாரிகளை, செயலாளர்களை இடமாற்றம் செய்ய சொல்லி தலைமை செயலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். செயலாளர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை, அந்த அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே உள்ளது என்று அவருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் தற்போது மீண்டும் துணை நிலை ஆளுநருக்கு டெல்லி முதல்வருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ளார் டெல்லி முதல்வர். கெஜ்ரிவால் நேற்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை செய்யப்படும்.