முகமெல்லாம் ரத்தம்.. வெறி ஏற்றிய கேரளா ஸ்டோரி! ஜம்மு காஷ்மீர் மருத்துவக்கல்லூரி மாணவர்களிடையே மோதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் தாக்கத்தால் இரு தரப்பு மாணவர்களிடையே வெடித்த மோதலில் 5 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி, பிரணவ் மிஸ்ரா நடிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்பட்டு உள்ளதாக திரைக்கதை எழுதப்பட்டு இருக்கிறது.

அடிப்படை ஆதாரங்கள் இன்றி இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறி இப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. நீதிமன்ற வழக்குகளை தாண்டி பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்கள், பார்வையாளர் வருகை குறைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி 2 வது நாளில் இருந்து இப்படம் திரையிடப்படாது என்று மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்தன. அதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இப்படத்துக்கு தடை விதித்தார்.
அதே சமயம் பிற மாநிலங்கள் இப்படம் திரையரங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் வெளியானால் மதவெறுப்பு அதிகரிக்கும் என்றும், மதவாத மோதல்கள் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது. இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர்களும் இதே அச்சத்தை பதிவு செய்தனர். தற்போது அது ஜம்மு காஷ்மீரில் உண்மையாகி இருக்கிறது.
அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் காரணமாக பயங்கர மோதல் வெடித்து இருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குழுமத்தில் தீபக் என்ற மாணவர் இந்த படத்தின் லிங்கை பகிர்ந்து, 'விழித்து இருப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்.' என்று தெரிவித்தார்.
இதற்கு ஆகிப் இஷாக் என்ற மாணவர் ஆட்சேபனை தெரிவித்து இருக்கிறார். எதிர்மறை கருத்துக்களை பகிர்வதை தவிர்க்குமாறு அவர் கூறியுள்ளார். ஆனால், அந்த லிங்கை தீபக் நீக்காத நிலையில், இதுபோன்ற பதிவுகளை பகிர்வதாக இருந்தால் தனியாக வாட்ஸ் அப் குழுவை தொடங்கிக்கொள்ளுமாறு ஆகிப் கூறி உள்ளார். மேலும் சில மாணவர்களும் தி கேரளா ஸ்டோரி படத்தின் லிங்கை பகிர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தீபக் தனது நண்பர்கள் மற்றும் கல்லூரி சீனியர்களுடன் சென்றுகொண்டு இருந்தபோது, வாட்ஸ் அப் குழுவில் கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆரிப் குல் என்ற முதலாமாண்டு மாணவரை தடுத்து நிறுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு ஆரிபுக்கு ஆதரவாக மேலும் சில மாணவர்கள் அங்கு திரண்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கல்லூரி வளாகத்திலேயே மோதல் வெடித்தது. அப்போது கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி வெளி நபர்களும் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் இறுதியாண்டு மாணவர் ஹசீப் என்பவரின் தலை இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் அவரது மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ளார். முகம் முழுவதும் ரத்தமாக இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதேபோல் அருணேஷ், அன்கித், உமர், அக்ஷித் ஆகிய மாணவர்களும் இந்த மோதலில் லேசாக காயமடைந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரு தரப்பு மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது குறித்து தனியார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர், தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் லிங்கை பகிர்ந்த தீபக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆகிப் இஷாகும் நெருங்கிய நண்பர்கள் என்றும், இந்த படத்தின் காரணமாகவே இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications