”நோட்டா” கட்சி ஆரம்பித்த நடிகர் மனைவி - தேர்தல் விழிப்புணர்வுக்காக “கலக்கல் காமெடி”
சண்டிகர்: தேர்தல் நேர பரபரப்புகளில் இருந்து இது போன்ற சில "கூலான" விஷயங்கள்தான் நம்மை கலகலப்பாக்குகின்றன.
அப்படித்தான் காமெடி நடிகர் ஒருவரின் மனைவி "நோட்டா" என்ற பெயரில் புதிய கட்சி துவங்கி காமெடி செய்து வருகின்றார்.
மறைந்த காமெடி நடிகர் ஜஸ்பல் பாட்டீயின் மனைவி சவிதா பாட்டீ ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து பணியாற்றினார்.பின்பு, ஏதோ சில காரணங்களுக்காக கட்சியை விட்டு விலகினார்.
"நோட்டா" ஒரு காமெடி கட்சி:
இவர்தான் தற்போது "நோட்டா" என்ற புது கட்சியை தொடங்கி காமெடி செய்து வருகிறார். ஊழல் அரசியல்வாதிகள் நோட்டா கட்சியில் இணையலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஊழல் செய்தால் உறுப்பினர்:
இந்த கட்சியில் சேர 200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
குற்றவாளினா டபுள் ஓகே:
மேலும் சேர விரும்பும் உறுப்பினர் மீது குறைந்தது 25 கிரிமினல் வழக்குகள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அட, விழிப்புணர்வு பிரச்சாரம்பா:
சண்டிகர் நகரில் செக்டர் 17 பிளாசா என்ற இடத்தில் நேற்று முன்தினம் கூட்டம் நடத்திய சவிதா பாட்டீ கையில் கரன்சி நோட்டுகளுடன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடி ஊழல் அரசியல்வாதிகளை கிண்டல் செய்தார். இதுவும் ஒருவித விழிப்புணர்வு பிரசாரம் என்று தெரிவித்துள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications