ரூ.262 கோடி கிடைத்தும் போச்சே.. அமெரிக்காவில் பலியான மாணவி குடும்பத்தில் அடுத்த சோகம்! நடந்தது என்ன?
விஜயவாடா: அமெரிக்காவின் சியாட்டில் நகரில், போலீஸ் கார் மோதி பலியான இந்திய மாணவி ஜானவி கண்டுலா மரணத்துக்கு இழப்பீடாக அவரது குடும்பத்திற்கு ரூபாய் 262 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நேரத்தில் அந்த மாணவியின் குடும்பத்தில் சோக நிகழ்வு அரங்கேறி உள்ளது. கடந்த 10 ஆம் தேதியன்று ஜானவியின் தந்தை உயிரிழந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஜானவி கன்டுலா, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தகவல் தொழில்நுட்பப் படிப்பு படித்து வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு சியாட்டில் நகரில் அவர் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ஒரு போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது பலமாக மோதியது.

அமெரிக்காவில் இந்திய மாணவி பலி
இதில் ஜானவி கன்டுலா உயிரிழந்தார். குறிப்பிட்ட அந்தப் பகுதியில் வாகனங்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதி உள்ள நிலையில், காவல் அதிகாரி கெவின் டேவ் தனது வாகனத்தை மணிக்கு 119 கி.மீ வேகத்தில் அசுரவேகமாக ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது. இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு சியாட்டில் நீதிமன்றத்தில் நடைபெற்றது. போலீஸ் வாகனம் சைரன் ஒலி மற்றும் அவசரகால விளக்குகளை எரியவிட்டுதான் சென்றது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜான்வி ஒரு புத்திசாலி மாணவி என்றும், அவரது மற்றும் குடும்பத்தினரின் எதிர்காலம் மிகக் கோரமான முறையில் பறிக்கப்பட்டுள்ளதாகவும் ஜானவி குடும்பத்தினர் தரப்பில் வாதிட்டனர்.
ரூபாய் 262 கோடி இழப்பீடு
29 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நகர நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்தது. அதாவது, ஜானவி கண்டுலா குடும்பத்துக்கு 262 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதால் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தொகையில் பெரும் பகுதியை சியாட்டில் நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் என்றும், மீதமுள்ள தொகையைச் சியாட்டில் மாநகராட்சி நேரடியாக வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் வாகனத்தை கவனக் குறைவாக ஓட்டிய கெவின் டேவ் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 5,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. விபத்து நடந்த போது, இந்த சம்பவத்துக்கு சிறிய தொகை இழப்பீடாக வழங்க வேண்டியிருக்கும் என சிரித்துக் கொண்டு இழிவாகக் கருத்து தெரிவித்த மற்றொரு போலீஸ் அதிகாரி டேனியல் ஆட்ரர் என்பவரும் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மாணவி குடும்பத்தில் சோகம்
சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு சியாட்டில் நகர அதிகாரிகள் மாணவின் ஜானவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக 29 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 262 கோடி) வழங்க முடிவு செய்துள்ளனர். ஆனால், ஒரு துயரமான சம்பவமாக, ஜானவியின் தந்தை, கண்டுலா ஸ்ரீகாந்த் உயிரிழந்துள்ளார்.
ஜானவி தந்தை மறைவால் நிலைகுலைந்த குடும்பம்
போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றிய கண்டுலா ஸ்ரீகாந்த், மகளின் மரணத்துக்குப் பிறகு பணிக்குச் செல்லவில்லை. அவர் நீண்ட விடுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10 அன்று காலமானார். இதன் காரணமாக அவர்களது குடும்பத்தினர் பெரும் வேதனையை எதிர்கொண்டுள்ளனர்.
தமது மகள் பலியானதற்கு இழப்பீடாக ரூபாய் 262 கோடி வழங்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க பட்டத்துடன் திரும்பும் மகள் இல்லை, நீண்டகாலமாக நீதியை எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையும் இல்லை என ஜானவியின் குடும்பமே மொத்தமாக நிலை குலைந்து போயுள்ளது.
-
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு -
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு.. டார்க்கெட் ஹார்முஸ் ஜலசந்தி -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா -
சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! -
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
கெஞ்சாத குறையாக கேட்ட டிரம்ப்.. மதிக்காத ஐரோப்பிய நாடுகள்.. ஈரான் போரில் தலையிட மறுப்பது ஏன்?












Click it and Unblock the Notifications