தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர். 'ஹிட்லர்'.... ட்விட்டரில் விமர்சித்த சந்திரபாபு மகன் மீது புகார்!!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவை ஹிட்லர் என்று ட்விட்டரில் விமர்சித்த ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மீது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியினர் (டி.ஆர்.எஸ்.) ஹைதராபாத் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர் ரேவநாத் ரெட்டி அவரது வீட்டில் மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இது பற்றி தமது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த லோகேஷ், "டி.ஆர்.எஸ். குண்டர்களால் ரேவநாத் ரெட்டி தாக்கப்பட்டுள்ளார். அரசு ரவுடிகளால் நடத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஹிட்லர் முதல்வர் ஆட்சி செய்கிறார்' என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
Revanth Reddy attacked by TRS goons. Government run by rowdies, Law & Order out of control. #HitlerCM is ruling!
— Lokesh Nara (@naralokesh) November 14, 2014 லோகேஷின் விமர்சனத்தால் கொந்தளித்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியினர் ஹைதராபாத் எல்.பி. நகர் காவல்நிலையத்துக்குச் சென்றனர். லோகேஷ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் லோகேஷ் மீது வி. ராமகிருஷ்ணா கவுட் என்ற டி.ஆர்.எஸ். தலைவர் புகார் கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்தும் சந்திரசேகர் ராவை லோகேஷ் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications